கலர்ஸ் டிவி விஜிஸ் ஆபாசக்கூத்து- பலநாள் திருடி இன்று அகப்பட்டாள் : அம்பலப்படுத்தும் கவிஞர் தாமரை

 
k

பலநாள் திருடி/டன்   ஒருநாள் அகப்படுவாள்/ன் என்று கவிஞர் தாமரை தனது வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு இட்டிருக்கிறார்.

அதில்,    ’’விஜி என்கிற விஜயலட்சுமி என்கிற விஜிஸ் பழனிச்சாமி என்கிற ஒரு 'கைதேர்ந்த' கேடி அம்பலப்படுகிறாள்.  இதுவரை இந்தப் பெண்ணின் பெயரை நான் பொதுவெளியில் உச்சரித்ததில்லை.  வேறு ஒரு விசயத்தில் சிக்கி, தானாக மாட்டியதால் இப்போது வெளியிடுகிறேன். 

    15 ஆண்டுகளாக இவள் ஆடிய ஆட்டத்தில் சிக்குண்டு வாழ்வை, வாழ்வாதாரத்தை, உடல்நலத்தை, மனநலத்தை இழந்தவர்கள் ஏராளமானோர்.  கடைசியாக, கோவையில், தன்னை விட ஏழு வயது குறைந்த, மணமாகாத ஓர் அப்பாவி இளைஞனை ஏமாற்றித் திருமணம் செய்து, அச்சுறுத்தி, தற்கொலை செய்து கொள்ள வைத்து விட்டாள். அவனது குடும்பம் தத்தளித்துக் கதறுகிறது. இவளுக்கு இன்னும் தன் முதல் கணவன் சண்முகசுந்தரத்தோடு விவாகரத்து ஆகவில்லை. இப்போதும் வெள்ளக்கோவில் போகும்போது அவரோடு குடும்பமாகத்தான் இருக்கிறாள். 

v

   தற்போது சென்னையில் 'கலர்ஸ்' தொலைக்காட்சியில் பணியாற்றும் இவள், 'நான் மீடியா பர்சன், என்னை யாரும் தொட முடியாது' என்று அடிக்கடி மார்தட்டிச் சொல்பவள். 'மீடியா'வில் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்து விடலாமா ??? பொறுத்திருந்து பார்ப்போம் 'மீடியா உலகம்' இவளைக் காப்பாற்றப் போகிறதா இல்லை உரித்துத் தொங்க விடப் போகிறதா என்று ! 

    சரி, எதற்காக நான் இவளைப் பற்றிப் பேச வேண்டும் ?. அது ஒன்றுமில்லை, என்னைவிட யார் இவளைப் பற்றி ஆதாரத்தோடு பேச முடியும் ?    ஆம், 2012 இல் தியாகு ஒரு பெண்ணோடு 'ஓடிப் போனார்' என்று அடிக்கடி சொல்வேனே, 'அந்தப் பெண்' சாட்சாத் இந்த விஜயலட்சுமியேதான் !

    2011இல் தொடங்கி 2013 வரை இருவரும் அடித்த ஆபாசக்கூத்து குடும்பம், தாய்த்தமிழ்ப்பள்ளி, இயக்கம், பொதுவாழ்க்கை என அனைத்தையும் குலைத்துப் போட்டது. அன்றைக்கே இருவரையும் அம்பலப்படுத்தி வெளுத்து விட்டிருந்தால், இன்றைக்கு இவ்வளவு தூரம் வந்திருக்காது. 

t

   எப்படியோ பலநாள் திருடி இன்று அகப்பட்டாள். பத்தாம் வகுப்பைத் தாண்டாத இவள் பத்தாண்டுகளில் இவ்வளவு உயரத்தைத் தொட்ட கதையைப் பார்க்கலாமா ?? 
   எல்லா அயோக்கியத்தனங்களிலும் எச்சரிக்கையாக இருக்கும் தியாகு, இவள் விசயத்தில் மட்டும் காப்புகளை மறந்து மாட்டி வீழ்ந்த கதையையும் சேர்த்துக் கொள்வோமா ?? 

   என்னுடைய வேதனை என்னவென்றால், பாடல்களில்கூட அநாகரீகத்தை அனுமதிக்காத நான் இந்த 'ஆபாசக்கூத்தை' என் மைநா (பேனா)வால் எழுத வேண்டி நேர்கிறதே !    இனி எவரும் இதுபோன்ற மோசடிகளில் சிக்கக் கூடாது என்பதற்காக தியாகு, விஜயலட்சுமி விவகாரம் வெளிப்படையாகப் பேசப்பட வேண்டும்’’என்று தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும்,  ‘’இந்த பெண் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் பப்பினி கிராமத்தை சேர்ந்தவர் என்றும், அவள் கணவர் சண்முகசுந்தரத்தின் ஊர். ஊரிலேயே ஏகப்பட்ட ஊழல்கள் செய்துதான் சென்னைக்கு ஓடி வந்தாள். ஊரில் கோபால் என்பவனோடு கள்ள உறவு... அதைக் கண்டித்ததால் கணவனைப் பற்றி அவதூறு...எனப் போகிறது கதை... ’’என்கிறார் தாமரை.

th

அதற்கு, சன் சரவணகுமாரசரண் என்பவர்,  ‘’ஒரத்தநாடு சேர்மன் கதையில் ஆரம்பித்து, திருச்சி சிறையில் கிடைத்த நட்பும், நக்சல் பாரி லெனின் மகள் திருமணம், மாஜி அமைச்சர் அழகு திரு நாவுக்கரசின் அண்ணன் டாக்டரின் முதல் தமிழ் சங்க கூட்டம், சென்னிமலையில் சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர் மனைவியை அபகரிப்பு ஆரம்பித்து எல்லாக் கதைகளும் வருமா?’’ என்று கேட்க,  ‘’என்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதற்குப் பிறகான கதைகள் ஓரளவு தெரியும். ஒரத்தநாடு கதை போன்றவை இன்னும் மூத்தவை. முன்னாள் மனைவி லதாவுக்குத் தெரிந்திருக்கலாம்’’என்கிறார் தாமரை.

tt