காமன்வெல்த் : பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

 
stalin

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரகளுக்கு   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் : பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து சுமார் 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பங்கேற்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றிருந்தனர். நேற்றுடன் நிறைவுபெற்ற  காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியலில்  4வது இடத்தை பிடித்துள்ளது.  இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் : பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்கக்காரனாகிவிட்ட சரத் கமல், சத்தியன் ஞானசேகரன், தீபிகா பல்லிகல், இந்தியாவின் பெருமை பி.வி.சிந்து, ஆற்றல்மிகு லக்‌ஷ்யா சென், ஆதிக்கமிகு நிக்கத் சரீன், இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர், மகளிர் கிரிக்கெட் அணியினர் உள்ளிட்ட, நாட்டுக்காகத் தங்களது முழு உழைப்பையும் அளித்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது பாராட்டுகள். இனி வருபவை யாவும் இதைவிடச் சிறப்பானவையாக மட்டுமே இருக்கும். தங்களது எதிர்கால முயற்சிகளில் வெற்றிபெற எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.