இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா

 
mutharasan

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசனுக்கு கடந்த இரண்டு நாட்களாக கடுமையான சளி, இருமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதனையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவ மனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே முத்தரசனின் உடல்நிலை குறித்து மாநில துணை செயளாளர் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முத்தரசன் இரண்டொரு நாள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மற்றபடி முத்தரசன் உடல்நிலை சீராகவும், இயல்பாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.