"கல்லு மூங்கிலால் நாய் மண்டையில் ஒரே போடு" - சர்ச்சை பதிவால் சிக்கிய ஹெச்.ராஜா

 
h

பாஜக மூத்த நிர்வாகி ஹெச். ராஜாவின் ட்விட்டர் பதிவு தற்போது அவர் மீது இந்திய விலங்கு நல வாரியம் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு மாறியுள்ளது.

h

கடந்த 21 ஆம் தேதி பாஜக மூத்த நிர்வாகி ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் , எங்கள் வீட்டில்  அல்சேஷன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால் ஒருநாள் அதற்கு வெறி பிடித்து மாடு, கன்றுகளை கண்டிக்கத் துவங்கியது. நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் ஒரு கல்லு மூங்கிலால் அதன் மண்டையில் ஒரே போடு போட்டார். நாய் பரிதாபமாக இறந்தது. வருத்தமாக உள்ளது. என்ன செய்வது.என்று குறிப்பிட்டு இருந்தார்.

ttn

இந்நிலையில் ஸ்வப்னா  சுந்தர் என்பவர்  ஹெச். ராஜாவின் ட்விட்டர் பதிவை ஆதாரமாகக் கொண்டு அவர் மீது விலங்கு நல வாரியத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இந்திய விலங்கு நல வாரியம் உத்தரவிட்டுள்ளது . மிருகவதை தடை சட்டம் 1960 பிரிவு 11இன் படி தெருநாய் உட்பட எந்த விலங்கையும் துன்புறுத்துவது குற்றமாகும். இந்திய தண்டனை சட்டம் 429 படி எந்த விலங்கையும் கொலை செய்தல்,  விஷம் கொடுத்தல் ஆகிய குற்றங்களுக்கு ஐந்தாண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.