அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று வெகுவாக குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது. நேற்றுமுன்தினம் 43 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் , ஒரே நாளில் தமிழகத்தில் 35 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதிகபட்சமாக சென்னையில் 19 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் 67வது நாளாக எந்த மாவட்டத்திலும் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 183 பேரும், செங்கல்பட்டில் 57 பேரும் உட்பட மொத்தம் 331 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 40 மாணவர்கள் பரிசோதனை செய்ததில் இதுவரை 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் , 6 மாணவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.