#BREAKING தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முன்பை காட்டிலும் வெகுவாக குறைந்து வருகிறது. இருப்பினும் மக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.
இந்த சூழலில் தமிழகத்தில் புதிதாக 12,824 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 89 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,55,376 உயர்ந்துள்ளது.
இருப்பினும் தமிழகத்தில் 74-வது நாளாக கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதுவரை 38 ,025 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் , 34 லட்சத்து 16 ஆயிரத்து 858 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை வண்டலூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. 3,000 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 74 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 74 மாணவர்களும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் 20 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.