ஒண்டிவீரன் நினைவு நாள் - ஈபிஎஸ் மரியாதை!!

 
tn

 ஒண்டிவீரன் படத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் மரியாதை செலுத்தினார்.

tn

தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் மிக முக்கியமாக அறியப்படுபவர் ஒண்டிவீரன்.  திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டான் செவலை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரர் பூலித்தேவன் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும் இருந்த இவர் ,விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவர். ஆங்கிலேய படைகளை தனியாக சென்று அழித்த காரணத்தினால் இவருக்கு ஒண்டிவீரன் என்று சிறப்பு பெயர் கிடைத்தது. ஒண்டிவீரனின் 251 வது நினைவு தினத்தை ஒட்டி தபால் தலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.




இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாய் விளங்கி ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்புரிந்த சுதந்திர போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் 251-ஆவது நினைவு தினத்தையொட்டி  இன்று (20.08.2022) சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.