திமுக எம்.பி. கனிமொழிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

 
kanimozhi

திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 100க்கு கீழே பதிவாகி வந்த தினசரி கொரோனா எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 500ஐ தாண்டி 600க்கு மேல் பதிவாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 34.61 லட்சமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுளது. தமிழகத்தில் தற்போது  3,951 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Kanimozhi

இந்நிலையில், திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் கவச உடை அணிந்து வந்து தனது வாக்கை பதிவு செய்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வால் பாதிக்கப்பட்ட கனிமொழி சென்னையில் உள்ள இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனாவால் இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டுள்ள கனிமொழி, கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.