முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

 
stalin

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. 

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 29ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.பி.க்களின் செயல்பாடுகள், நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்புவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

மதுரை எய்ம்ஸ், சேது சமுத்திரத் திட்டம், ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது மற்றும் ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாக குடியரசு தலைவரிடம் கொடுக்கப்பட்டுள்ள மனு குறித்து கேள்வி எழுப்ப இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.