மகள் உடல் வீட்டில் மீட்பு - தந்தை உடல் காட்டில் மீட்பு

 
ட்வ்

 மகளின் உடல் வீட்டில் இருந்து மீட்கப்பட்டு இருக்கும் நிலையில் தந்தையின் உடல் காட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட இருக்கிறது.   திருவண்ணாமலை மாவட்ட பகுதி மக்களிடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ் செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன்.   இவரது மனைவி  ரம்பா.  இத்தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகளும்,  ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன்.  

  சே. கூடலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார் சிவபாலன்.   கடந்த 8ஆம் தேதி இரவு சிவபாலனின் மகள் தேவிப்பிரியா வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் அவரது தாயார் ரம்பா. இதையடுத்து தச்சம்பட்டு போலீசில் புகார் அளித்து உள்ளார். 

ச

 இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் சிவபாலன் வீட்டுக்கு வராமல் இருந்திருக்கிறார்.   இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தச்சம்பட்டு போலீசார் இறந்த மாணவி தேவிபிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.   மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் கொடுத்துவிட்டனர்.

 மாணவியின் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மணலூர்பேட்டை சாலையில் உள்ள கண்ணமடை காட்டில் சிவபாலன் இரண்டும் கை மணிக்கட்டு மற்றும்  கழுத்து அறுத்த நிலையிலும் இறந்துவிட்டதால் விஷமருந்தியும் சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மாணவி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்,   மாணவி இறந்தது முதல் அவரது தந்தை சிவபாலன் காணாமல் போனதால் மர்மமான முறையில் கைகளில் காயங்களுடன்  மீட்கப்பட்டு இருப்பதால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா ?கொலையா? என்ற கோணத்தில் போலீசார் சிவபாலன் மனைவி மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.