கார்த்தி, விஷாலுக்கு பகிரங்க கொலை மிரட்டல்! துணைநடிகரிடம் விசாரணை

 
kவ்

நடிகர்கள் கார்த்தி விஷாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.   வாட்ஸ் அப் மூலம்  வந்த அந்த ஆடியோ கொலை மிரட்டலை விடுத்தது துணை நடிகர் என்பது தெரிய வந்திருக்கிறது.   இதை அடுத்து அவர் மீது தேனாம்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது .  போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வி

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தென்னிந்திய நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ் நேற்று இரவு முன்தினம் புகார் ஒன்றை அளித்துள்ளார் .  அந்த புகாரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர்.  பொதுச் செயலாளர் விஷால் . பொருளாளர் கார்த்தி ஆகியோர் இரவு பாலாக உழைத்து வருகின்றார்கள் . இந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார் துணை நடிகர் ராஜதுரை. 

 சங்கத்தின் விதிகளுக்கு புறம்பாக அவர் வாட்ஸ் அப் குழுவில் சங்கத்தின் நிர்வாகிகள் விஷால்,  கார்த்தி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.   நடிகர் சங்க உறுப்பினர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த குரல் பதிவு வைரலாகி வருகிறது.  இப்படி பகிரங்கமாக மிரட்டல் விடுத்த துணை நடிகர் ராஜதுரை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் .  சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வாட்ஸ் அப் குரல் பதிவையும் நீக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

 தென்னிந்திய நடிகர் சங்கர் மேலாளர் அளித்த இந்த புகாரின்படி தேனாம்பேட்டை போலீசார் அவதூறு வழக்கு பதிவு செய்து துணை நடிகர்  ராஜதுரையிடம் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.