முதல்வரை விமர்சித்து ட்வீட் - கரூர் பாஜக பிரமுகர் கைது!

 
tn

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூகவலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட கரூர் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Mk Stalin

சமூகவலைதளங்களில்  அவதூறு கருத்து பரப்புவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் 4 நாட்கள் பயணமாக துபாய் சென்று இருந்தார்.  

arrest

அப்போது அவர் உடுத்தியிருந்த உடை குறித்து அவதூறு பரப்பியதாக எடப்பாடியை சேர்ந்த பாஜக பிரமுகர் அருண் பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார்.  இதையடுத்து திருமண விழாவில் முதல்வரை விமர்சித்ததாக பாஜகவின் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

tn

இந்நிலையில் கரூர் மாவட்டம் பாஜக நிர்வாகி விக்னேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து பரப்பி உள்ளார்.  இதுகுறித்து  திமுக தகவல் தொழில் நுட்ப அணி கொடுத்த புகாரின் அடிப்படையில் முனியப்பனுர் வீட்டிலிருந்த பாஜக நிர்வாகி விக்னேஷை போலீசார் கைது செய்தனர். முதல்வரை விமர்சித்து வரும் பாஜக நிர்வாகிகள் கைதாகி வருவது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.