தொடர் கனமழையால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை!!

 
sathuragiri

மழையின் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

sathuragiri

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை 4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி. இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.  அதேசமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

sathuragiri

இந்நிலையில்  தொடர் கன மழை காரணமாக சதுரகிரி  கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால்  மலையேற பக்கதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் அமாவாசைக்கு இன்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை  பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.