மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - வெளியானது முக்கிய அறிவிப்பு!!

 
kamal

மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாக குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

kamal hassan

இதுக்குறித்து மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்கள் மௌரியா, தங்கவேலு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில முக்கிய நிகழ்வுகள் குறித்து தெரிவிப்பதற்காக நமது தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் தலைமையிலான அவசர நிர்வாகக் குழு, செயற்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 18-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மதியம் 12 மணி அளவில் நமது தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

ttn

இந்த நிகழ்வில் அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தவறாது கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.