அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பமா???.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

 
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பமா???..  நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

 தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக  தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள்  ஜூன் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது   நாளை  ( ஜூன் 22ம் தேதி)  முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

கல்லூரி மாணவர்கள்

இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், “ தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பிபிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் வருகிற ஜூலை 7ம் தேதி வரை பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பமா???..  நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் ‘The Director, Directorate of Collegiate Education, Chennai - 6” என்ற பெயரில் வருகிற 27ம் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மேலும், இது குறித்த தகவலுக்கு 044 - 28260098 / 28271911 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,