அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் கவலை..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,608க்கு விற்பனையாகிறது.
தங்கம் எப்போதுமே பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. அது ஆபரணங்கள் அணிவதனால் வரும் ஆசையோ அல்லது தங்கத்தை சிறந்த முதலீட்டுக்கான காரணியாக பார்ப்பதனால் வரும் ஆசையோ என்று குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது. தங்கத்தின் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், அதன் மீதான மோகம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் சவரன் ரூ. 41 ஆயிரத்தை தாண்டும் நிலையை எட்டியது.
இது நகைப்பிரியர்களிடயே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து ஒரு சவரன் ரூ.40,528க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கிராமுக்கு ரூ.58 குறைந்து ரூ.5,006-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது. அதாவது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.40,608-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,076-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.74.00-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.