பள்ளி மாணவிகளை வற்புறுத்தி மது அருந்தவைத்த இளைஞர் கைது!!
கரூரில் பள்ளி சீருடையில் மாணவிகள் மது போதையில் தள்ளாடி விவகாரத்தில் மாணவிகளை வற்புறுத்தி மது அருந்து வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் சர்ச் கார்னர் பகுதியில் 3 பள்ளி மாணவிகள் சீருடைகள் மதுபோதையில் தள்ளாடிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. மாணவிகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறி அங்கிருந்து அவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து வரவழைத்த நிலையில் மாணவிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதன்பிறகு தான் மாணவிகள் மது போதையில் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மூன்று மாணவிகளும் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிப்பதாகவும் , இவர்கள் தேர்வில் தோல்வியடைந்து மறு தேர்வு எழுத சீருடையில் பள்ளிக்கு வந்ததாகவும் , ஒயின் குடித்தால் கலராக மாறலாம் என்று இளைஞர் கூறியதைக் கேட்டு டாஸ்மாக் கடையில் மூன்று மாணவிகளும் ஒயின் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மாணவிகள் வீட்டுக்கு புறப்பட்டபோது போதை தலைக்கேறி அவர்கள் தடுமாறி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் விசாரணையின் அடிப்படையில் மாணவிகளை வற்புறுத்தி மது அருந்துவைத்த தீனா என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன் மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அறிவுரை கூறி போலீசார் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தது குறிப்பிடத்தக்கது.