தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பெயர்பலகை - ஜெயக்குமார் செய்த செயல்!!

 
tn

தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 

tn

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது.  2023 மார்ச் 31ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்ட  நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை  இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.இதற்கென 6 பி என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு  அனைத்து   தலைமை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும் ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரவிட்டார்.  அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

election

இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் சென்னையில் தொடங்கியது. தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்புகள் பங்கேற்றுள்ளனர். ஈபிஎஸ் தரப்பில், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் பங்கேற்றுள்ளார். கோவை செல்வராஜ் பக்கம் இருந்த அதிமுக என்னும் பெயர் பலகையை தங்கள் பக்கம் எடுத்து வைத்துக்கொண்டார் ஜெயக்குமார்.  அதிமுக தலைமைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.