பாவூர்சத்திரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை வேண்டும்.. பிஎஃப் வட்டி குறைப்பை திரும்ப பெறுக - சரத்குமார் வலியுறுத்தல்..

 
பாவூர்சத்திரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை வேண்டும்..  பிஎஃப் வட்டி குறைப்பை திரும்ப பெறுக - சரத்குமார் வலியுறுத்தல்..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  பிஎஃப் வட்டி குறைப்பை திரும்பப்பெற வேண்டும் என்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில்(ESIC -Employee state insurance corporation) பதிவு செய்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன் பெற்று வரும் நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இ எஸ் ஐ மருத்துவமனை அமைத்து மக்களுக்கான மருத்துவ பயனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை முன் வைக்கிறேன்.

இஎஸ்ஐ மருத்துவமனை
 நூறு படுக்கைகளுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க நகரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேர் இசையில் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும், நகரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திற்குள் மற்றொரு இயற்கை மருத்துவமனை இருக்கக் கூடாது எனவும் விதி அமைக்கப்பட்டுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் தனியாக பிரிந்த நிலையில் இங்கு செயல்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பீடி கம்பெனிகளில் பணியாற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இசையில் பதிவு செய்துள்ளனர்.  எனினும் அவர்களுக்கு உதவியாக அழைக்கப்பெற்ற திட்டத்தின் பலனை மக்கள் பல கிலோமீட்டர் கடந்து சென்று வருவது சிரமமான இயலாத காரியமாக உள்ளது.

பீடி தொழிலாளர்கள்
ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை கொண்டுவர 2019 பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது இருப்பினும் இன்றுவரை திட்டப் பணிகள் மேற்கொண்டு நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல.

பீடி  தொழிலாளர்கள்,  பின்னலாடை தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களின் நலனை பிரதானமாக கொண்டு கிடப்பில் போடப்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கும் பணிகளை குறைந்த நிறைவேற்றவும்,  தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசையும் தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.
பி.எப். வட்டி விகிதம்
 மேலும் தொழிலாளரின் வருங்கால வைப்பு நிதிக்கான( EPFO- Employees Provident fund organization) வட்டி  கடந்த மார்ச் மாதம் 8.5 ஆக குறைதத நிலையில் தற்போது மீண்டும் 8.5 சதவிகிதத்திலிருந்து 8.1 சதவீதமாக குறைந்து இருப்பது தொழிலாளர்களின் நம்பிக்கைக்கு முரணானது.
தொழிலாளர்களின் பொருளாதார நலனை உறுதி செய்து,  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உடனடியாக வட்டி குறைப்பு அறிவிப்பு திரும்ப பெற்று பழைய வட்டி விகிதத்தை தொடரவேண்டும் எனவும்,  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்