எட்டப்பனுக்கு இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

 
eps

எட்டப்பன் வேலை பார்ப்பவர்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு  கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது.  அக்கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என  இரு தரப்பாக பிரிந்து தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல தேமுதிகவும் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  இடைத்தேர்தலுக்காக 111 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

eps

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி 2வது நாளாக2வது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சிலர் எட்டப்பன் வேலை பார்த்து வருகிறார்கள். கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களுக்கு இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முக்கியமானது. நமக்கு சோதனை புதிதல்ல. இவ்வாறு கூறினார்.