ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் - டெல்லி புறப்பட்டு சென்றார் எடப்பாடி பழனிசாமி

 
ep

பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார்.

தென்கிழக்கு ஆசிய நாடான  இந்தோனேசியாவில் பாலி தீவில்  நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.  அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் ஜி -20 நாடுகளின் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஜி- 20 அமைப்பு குறித்து விளக்கவும்,  அடுத்த ஆண்டு ஜி- 20 மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும் மாநில முதல்வர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.   இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு  மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். 

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார்.