"நீட் கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கே வசதியாக உள்ளது" - அமைச்சர் பொன்முடி

 
tn

நீட் கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கே வசதியாக உள்ளது என்று  அமைச்சர் பொன்முடி  குற்றம் சாட்டியுள்ளார்.

ttn

சென்னை பல்கலைக் கழகத்தின் 164 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று  நடைபெற்று வருகிறது.  சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும்,  சென்னை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை வகித்துள்ளார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை விருந்தினராக பங்கேற்றுள்ளார். 

tn

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம்  பட்டமளிப்பு விழாவில் பேசிய  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "இந்தியாவின் தலைச் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என உறுதியாக இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி .கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன்.நீட் கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாக உள்ளது. நீட் உள்ளிட்ட எந்த தேர்வாக இருந்தாலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்குதான் அவை வழி வகுக்கும்.  நீட் போன்று நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது . 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர வேண்டும்.பி.ஏ, பி.எஸ்.சி படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு இருக்கக் கூடாது
மாநிலத்தின் உரிமையாக கல்வி இருந்தால் பல்கலைக்கழகங்களில்  கல்வி இன்னும் வளரும் ; அதனால் தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறோம்" என்றார்.