திமுகவினர் தமிழ் தமிழ் என முழங்குவார்களே தவிர அதற்காக ஒன்றும் செய்ய மாட்டார்கள்- ஜெயக்குமார்

 
jayakumar

முகவினர் தமிழ் தமிழ் என முழங்குவார்களே தவிர அதற்காக ஒன்றும் செய்ய மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். 

சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள்யொட்டி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சென்னை மாவட்ட மூத்த அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

jayakumar

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: தைத்திருநாளை தமிழ்ப்புத்தாண்டாக திமுக அரசு கொண்டாடிய போது உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டை சித்திரையில் கொண்டாடி பெருமை சேர்த்தது அதிமுக. திமுகவினர் தமிழ் தமிழ் என முழங்குவார்களே தவிர அதற்காக ஒன்றும் செய்ய மாட்டார்கள். தமிழை போற்றும் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய இந்நாளில் உறுதியேற்போம். பெயரளவுக்கு சமத்துவம் என்று சொல்லிவிட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு திமுகவில் இடம் கிடைக்காது. சமத்துவம் என்பதை வாய்ச்சொல்லில் காட்டாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும். சமத்துவத்திற்கு அதிமுக ஆட்சியை போல திமுக ஆட்சியிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.