”பாஜகவுக்கு வேலை செய்யவே திமுகவினர் டெல்லிக்கு வரிசை காவடி”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

 
jayakumar

பாஜகவுக்கு வேலை செய்வதற்காக திமுகவினர் டெல்லிக்கு வரிசை காவடி எடுப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 
 

சென்னை இராயபுரம் N1 காவல் நிலையத்தில் நான்காவது நாளாக நிபந்தனை கையெழுத்திட பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிரூபர்களிடம் பேசியதாவது: திமுகவின் பெண் கவுன்சிலரின் கணவர் காவலர்களை கொச்சையான வார்த்தையில் திட்டுயதற்காக திமுக சார்பில் அவரை கட்சி பதவியிலிருந்து பணியிடை நீக்கம் செய்தது கண்துடைப்புக்கான செயல் மட்டுமே. திமுக தலைவரின் பேச்சை கட்சி நிர்வாகிகளை கேட்பதில்லை என்பதற்கான உதாரணம் தான் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்த இடங்களை திமுகவினவரே நின்று வெற்றி பெற்றது. 

jayakumar

திமுக எப்போதும் இரட்டை குதிரையில் பயணம் செய்பவர்கள் பிஜேபிக்கு வேலை செய்ய ஒருவர் பின் ஒருவராக வரிசை காவடி எடுப்பது போல் திமுகவினர் டெல்லி சென்று கொண்டு வருகின்றனர்.,கடந்த 10 மாதத்தில் திமுக ஆட்சியில் குடும்பத்தினர் செய்த ஊழலில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லி சென்று செய்த தவறுக்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சென்றுள்ளனர். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது குறித்த கேள்விக்கு ,தமிழக அரசு இதற்கான வாதத்தை சீராக எடுத்து வைக்காத காரணம். திமுக ஆட்சியில் காவல்துறையை அதிமுகவினரை ஒழித்துக்கட்ட பயன்படுகின்றனரே தவிர சட்ட ஒழுங்கினை பாதுகாப்பதற்காக அல்ல என்று குற்றம்சாட்டினார்.