கட்டுப்பாட்டை மீறிய நிர்வாகி.. அதிரடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ், ஓபிஎஸ்..

 
உள்ளாட்சி தேர்தல்… 6 பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக!

விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர்  அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.  இதுகுறித்து   அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது ஏன்? – அதிமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்!

அந்த  அறிக்கையில், ”கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட காரணத்தினாலும் ஆர்.ராம்குமார் (விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர்)

இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன்  எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கூட்டுக்கொள்கிறோம் “ என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.