டெல்லி ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழக விவசாயிகள் - மத்திய அரசுக்கு எச்சரிக்கை!!

 
ttn

தமிழக விவசாயிகள் 100 பேர் டெல்லி ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு,  2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது விவசாய விளைபொருட்களுக்கு இருமடங்கு லாபம் தருவதாக பிரதமர் மோடி கூறினார்.  நெல் கிலோ ரூபாய் 18 விற்பதை 54 ஆக உயர்ந்து வருவதாக அவர் கூறியிருந்தார்.  ஆனால் பிரதமர் மோடி சொன்னது போல அவரது வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கரும்பு டன்னுக்கு ரூ.2,700-ல் இருந்து ரூ.8,100 அதிகரிக்கப்படும் என்று கூறினார்.  தற்போது கரும்புக்கு ரூ. 200 மட்டுமே உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் உடனடியாக இது குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும். 

ttn

நெல் கரும்பு விலையை நிர்ணயம் செய்யும் கமிஷன் டெல்லியில் இருப்பதால் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த இருக்கிறோம் என அறிவித்திருந்தார்.இந்நிலையில்   தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்கம்  சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை திருச்சியில் இருந்து டெல்லி வந்தனர்.  தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காததால், டெல்லி ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

tn

இதை தொடர்ந்து விவசாயிகள்  ரயில் நிலையத்துக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுனர். தங்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அப்படி இல்லையென்றால்  பஞ்சாப் விவசாயிகளை போன்று காலவரையற்ற போராட்டம் நடத்தவோம் என்று தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக டெல்லியில் புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேல் விவசாயிகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.