கள்ளக்குறிச்சி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பெண் சார் ஆட்சியர் உயிரிழப்பு..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பெண் சார் ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
சங்கராபுரத்தில் கள்ளகுறிச்சி மாவட்ட சார் ஆட்சியர் ராஜாமணி உள்பட 6 பேர் காரில் சென்றுள்ளனர். அப்போது மயிலம்பாறை அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் சார் ஆட்சியர் ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார். டயர் வெடித்த விபத்தில் காரில் பயணம் செய்த மற்ற 5 பேரும் படுகாயம் அடைந்தனர் .
அவர்கள் 5 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கார் டயர் வெடித்து விபத்தில் சார் ஆட்சியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.