தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து

 
anna nagar

சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் உள்ள டி பிளாக்கில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

சென்னை அண்ணாநகரி உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமார் 606 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் D பிளாக்கில் உள்ள மின்சார அறையில் மின்கசிவு காரணமாக தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இதனை அறிந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த JJ நகர் மற்றும் கோயம்பேடு தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் உயிர்சேதம் எதுவும் இன்றி தவிர்க்கப்பட்டது. இ இந்த வீட்டு வசதி வாரியத்தில் கடந்த மூன்று முறை இதுபோன்ற மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும் இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  அங்கு குடியிருக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

fire

தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தரமான ஒயர்கள் போடப்படாததால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக கூறப்படுகிறது.  15 மாடி கட்ட தளத்தில் குடிநீர் வசதி முறையாக இல்லாததால், தீவிபத்து நேரத்தில் தீயை அணைப்பதற்கு கூட இங்கு தண்ணீர் இல்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்