சென்னை தீவு திடலில் கோலாகலமாக துவங்கியது மாபெரும் உணவு திருவிழா!
சென்னை தீவு திடலில் இன்று மாபெரும் உணவு திருவிழா கோலாகலமாக துவங்கியது.
சிங்காரச் சென்னையில் உணவுத் திருவிழா தீவுத்திடலில் இன்று முதல் ஞாயிறு வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது. மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள், கலை நிகழ்ச்சிகளை விழாவின் மூலம் நடத்த உள்ளனர். உணவு திருவிழா மகளிர் சுய உதவி குழுக்களின் சமையல் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகி புட்டு முதல் முடக்கத்தான் தோசை வரை இத்திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள் கிடைக்கும் என்றும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மூன்று நாட்கள் இங்குள்ள கடைகள் திறந்து இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விழாவில் குழந்தைகள் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை தீவுத்திடலில் தமிழக உணவு பாதுகாப்பு துறை சார்பில் மூன்று நாள் உணவு திருவிழாவானது இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. சென்னை உணவு திருவிழாவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.