முன்னாள் எம்.பி. மஸ்தான் மரணம் - 5 பேரிடம் விசாரணை!

 
tn

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உயிரிழப்பு தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் கடந்த 22ஆம் தேதி உயிரிழந்தார்.  சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது  நெஞ்சுவலி ஏற்பட்டு மஸ்தான் தஸ்தகீர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது.  

 

tn

இந்நிலையில் திமுக முன்னாள் எம்.பி.யும் மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் துணைத் தலைவராகவும் இருந்த மஸ்தான் மரண வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது மரணத்தில் திடீர் திருப்பம்  ஏற்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற மஸ்தானை, கூடுவாஞ்சேரி அருகே முகத்தை பொத்தி கொலை செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.