"பெருந்தலைவரைப் பற்றி புறம்பேசி விளம்பரம் தேடிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும்..." - தமாகா கண்டனம்!!

 
gk vasan

பெருந்தலைவரைப் பற்றி புறம்பேசி விளம்பரம் தேடிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த இயக்கதில் இருந்தாலும் அவர்களை மக்கள் நிராகரிப்பார்கள் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். 

gk

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தன்னலம் இல்லாமல் பொதுநலத்தோடும், தேசநலத்தோடும், தொலைநோக்கு பார்வையோடும் பல்வேறு திட்டங்களை அளித்து இந்நாடு வளர்ச்சியடைவதன் இறுதி மூச்சுவரை உழைத்த உத்தமர் கர்மவீரர் காமராஜர். இந்நாட்டையே வீடாகவும், மக்களையே குடும்பமாகவும் நினைத்து வாழ்ந்த தவயோகி. நாடும், நாட்டின் மக்களின் வளர்ச்சியே தன் வாழ்வின் நோக்கமாக கொண்டு வாழ்ந்து மறைந்தவர். சுய விளம்பரத்திற்காக எந்த காரியத்தையும் செய்ததில்லை. அப்படி கேட்டவர்களை என் தாய் நாட்டிற்காக செய்ததை நான் ஏன் வெளிச்சம் போட்டு காட்டனும் என்று திருப்பி கேட்டவர். எதற்காகவும், யாருக்காகவும், வரம்பு மீறி பேசியதில்லை. நாகரிகமில்லா வார்த்தைகளைப் பேசுவது பெருந்தலைவரின் பழக்கமும் இல்லை. இப்படி பல அருங்குணங்களை கொண்ட பெருந்தலைவரை தி.மு.கவின் முன்னாள் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் அவர்கள் , காமாராஜர் திமுகவின் கட்டைவிரலை வெட்டுவேன் என்று பேசினார் என்று கூறியிருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ttb

பெருந்தலைவரை நேசிப்பவர்களும், அவர்களது பெயரை சொல்லி அரசியல் செய்யும் தலைவர்களும் இவற்றை சகித்துக்கொள்ள மாட்டார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும், கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி பொற்கால ஆட்சியை செய்து எல்லோருக்கும் உதாரணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர். அவரைப்போல் தகுதியான தலைவர்கள் அன்றும் இல்லை, இன்றும் இல்லை, இனிமேல் பிறக்கப் போவதும் இல்லை. பெருந்தலைவரைப் பற்றி புறம்பேசி விளம்பரம் தேடிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த இயக்கதில் இருந்தாலும் அவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.