புல்லட் பைக்குடன் புத்தாண்டு வாழ்த்து கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

 
jayakumar

ஆங்கில புத்தாண்டையொட்டி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், நாடு முழுவதும் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்து மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பிறந்துள்ள 2023 ஆங்கில புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் நன்மை, மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.  ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஆங்கில புத்தாண்டையொட்டி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், புத்தாண்டு வாழ்த்துக்கள் (விஷ் யூ ஹாப்பி நியூ இயர்) என்று பதிவிட்டு, தான் புல்லட் பைக்கிள் அமர்திருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்
.