மக்கள் அசந்தால் தாய்ப்பாலுக்கு கூட ஜி.எஸ்.டி. போட்டுவிடுவார்கள் - இளங்கோவன் காட்டம்

 
evks elangovan

மக்கள் ஏமாந்தவர்களாக இருந்தால் தாய்ப்பாலுக்கு கூட மத்திய பாஜக அரசு ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செல்லும் இடங்களில் எல்லாம் சட்டத்தை மீறுகிறார். போலீசார் கூறுவதை கேட்பதும் கிடையாது. போலீசார் அறிவுறுத்தியும், ஈரோடில் ஊர்வலமாக சென்றுள்ளார். முன்னாள் காவல் துறை அதிகாரிக்கு, இது அழகா?. பால், நெய், தயிர் மீது ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஏமாந்தவர்களாக இருந்தால், இன்னும் கொஞ்ச நாளில், தாய்ப்பாலுக்கு கூட மத்திய அரசு ஜி.எஸ்.டி., வரி விதிக்கும்.  நெசவாளர்களுக்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெருவில் இறங்கி போராடுவதை விட, அங்கு ஓடும் சாக்கடைகளை சுத்தம் செய்தால் மக்களுக்கு நன்மையாக இருக்கும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.