11ம் வகுப்பு மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி - பரிசோதனையில் 2 மாத கர்ப்பம்

 
k

 11வகுப்பு மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததால் பெற்றோர் மாணவியை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.   அங்கு நடந்த பரிசோதனையில் மாணவி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது.   மாணவியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் இளைஞர் ஆண்ட்ரோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

 சென்னை தாம்பரம் அடுத்த பெருங்குளத்தூர்.  இப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.   சமீபகாலமாக அந்த மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்திருக்கிறது.   இதனால் மாணவியின் பெற்றோர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு  அழைத்து சென்றுள்ளனர்.   அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் மாணவி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதன்பின்னர் மருத்துவமனை நிர்வாகிகள் பெருங்களத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். 

an

 போலீசார் விரைந்து  தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். தாம்பரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீஸார் எழும்பூர் மருத்துவமனைக்கு சென்று மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர் .   

 பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக்  20 வயது இளைஞன்  ஆண்ட்ரோ.  இந்த ஆன்ரோவுடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.   பின்னர் இருவருக்கும் இடையே காதல் உண்டாகியிருக்கிறது.   இருவரும் நெருங்கி காதலித்து வந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு  மாணவியை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு சென்னை புறநகர் பகுதிகளில் சுற்றித் திரிந்து இருக்கிறார் ஆண்ட்ரோ.  அப்போது ஏற்பட்ட நெருக்கத்தில் சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார்.   இதில்தான் சிறுமி கர்ப்பம் அடைந்து இருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது .  இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.