இனியும் இப்படி நடக்கக்கூடாது.. உடனே பேச்சுவார்த்தை நடத்துங்க.. - மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை..

 
ஜிகே வாசன்

 இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் 2 படகுகளை மீட்கவும் இலங்கை அரசுடன் உடனடியாக மத்திய அரசு  பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவிர்த்துள்ளார்.

தமிழக மீனவர்கள்

இதுதொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் , “ நேற்று முன்தினம் நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.  நள்ளிரவில் அப்பகுதிக்கு வந்த இலங்கை மீனவர்கள், 21 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்த போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 21 தமிழக மீனவர்களை கைது செய்து, 2 படகுகளையும் இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

மீனவர்கள்

இதனால் தமிழக மீனவர்களின் குடும்பங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை இனியும் தொடரக்கூடாது. தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

தற்போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் 2 படகுகளை மீட்கவும் மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் மத்திய பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் “ என்று குறிப்பிட்டுள்ளார்.