அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் ஆரம்பம்!!

 
tn

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம்.  ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது . இதனால் இந்தாண்டு பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள 4000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் விண்ணப்பித்தனர்.  இதில் மருத்துவ கல்வி இயக்குனரகம் ,பொது சுகாதாரத் துறை, ஊரக மருத்துவ பணிகள் துறையில் பணியாற்றும் மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.

doctor

அந்த வகையில் தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான 1,000 இடங்கள் காலியாக உள்ள நிலையில் அதனை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று முதல்  தொடங்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இன்றுமுதல் 6 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது.

masu

மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.  கலந்தாய்வுக்கு பிறகு காலியாக உள்ள பணியிடங்கள் சமன் செய்யப்பட்டு , புதிய காலி பணியிடங்கள் கண்டறியப்படும் என்று சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.