தொடர் உச்சத்தில் தங்கம் விலை - அச்சத்தில் இல்லத்தரசிகள்!... ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ரூ.41 ஆயிரத்து 200 ஆக ஏற்றம் கண்டுள்ளது. 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். தங்கம் விலை வாரத்தின் முதல்நாளன இன்று அதிகரித்துள்ளது, தொடர்ந்து 3வது நாளாக விலை உயர்ந்துள்ளது.  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  சனிக்கிழமை மாலை தங்கம் கிராமுக்கு ரூ 15 உயர்ந்து ரூ.5130க்கு விற்பனை ஆனது. சவரனுக்கு ரூ 120ம் உயர்ந்து 41,040 ரூபாய் விற்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒரு பவுன் 41 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ரூ.41 ஆயிரத்து 200 ஆக ஏற்றம் கண்டுள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ரூ.5,150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அதேபோல ஒரு கிராம் வெள்ளி 20 பைசா அதிகரித்து 74.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி 200 ரூபாய் அதிகரித்து 74 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.