மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 200 அதிகரிப்பு.. நகை பியர்கள் அதிர்ச்சி..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, நகைப்பிரியர்களை கலக்கமடையச் செய்துள்ளது.
தங்கம் விலை திடீர் திடீரென எற்ற இறக்கங்களை சந்தித்து வருவது வழக்கமான ஒன்றுதான்.. ஆனால் அண்மைக்காலமாக அதாவது உக்ரைன் - ரஷ்யா போருக்கு பிறகு நாள்தோறும் தங்கம் விலை அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது.. ஒரு நாள் விலை குறைவதும், அடுத்தநாளே விலை உயர்வதுமாக இருப்பதால் நகை வாங்குவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடந்த ஜூன் 1ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, சவரன் ரூ.37,920-க்கு விற்பனையானது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் மறுநாளான ஜூன் 2ம் தேதி ரூ.160 ம், ஜூன் 3 ஆம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக தங்கம் விலை 400 ரூபாய் வரையிலும் ஏற்றம் கண்டது.
பின்னர் அடுத்தநாளே (ஜூன் 4) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாயும், ஜூன் 5ம் தேதி 200 ரூபாயும் குறைந்து இல்லத்தரசிகளை மகிச்சியில் ஆழ்த்தியது. இந்தநிலையில் நேற்று மீண்டும் சவரனுக்கு ரூ.80 வரை தங்கம் விலை உயந்தது. அதன்படி நேற்று சவரன் ரூ.38,160-க்கும், ஒரு கிராம் ரூ.4,770-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 200- ரூபாய் உயர்ந்து, நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,795-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.38,360-க்கும் விற்கப்படுகிறது. அதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.68.00 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,000-க்கும் விற்கப்படுகிறது.