சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு.. பவுன் 40 ஆயிரத்தை நெருங்கியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி..

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று ஒரு சவரன்  ரூ. 39,896 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.     குறிப்பாக  மார்ச் முதல் வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி,  இல்லத்தரசிகளை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது.  அதன்பிறகு அடுத்த நாள் முதலே தங்கம் விலை குறைந்தது. ஒரு நாள் குறைவதும், மறுநாள் உயர்வதுமாக  கடந்த மாதம் முழுவதும் தங்க விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருந்தது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்தே ஏறுமுகத்தில் இருந்தும் வரும் தங்கம் இலை இன்றும் அதிகரித்திருக்கிறது.  அந்தவகையில் இன்றும் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 320  ரூபாய் உயர்ந்திருக்கிறது. நகை பிரியர்களை அதிர வைக்கும் வகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு 1000 ரூபாய்க்கும் மேல்  அதிகரித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி

சென்னையில் இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.39,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,987-க்கு விற்பனை ஆகிறது.  நேற்றைய தினம்  22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம்  4,956 ரூபாய்க்கும்,  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 39,648க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.  

அதேபோல் சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 90  காசுகள் அதிகரித்துள்ளது.   நேற்று 72 . 90 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி, இன்று   73  ரூபாய் 80 காசுகளுக்கு  விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 73,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.