தங்கம் விலை மேலும் அதிகரிப்பு... ஒரு சவரன் ரூ.40,112 க்கு விற்பனை..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.40,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்தே ஏறுமுகத்தில் இருந்தும் வரும் தங்கம் விலை, கடந்த 14 ஆம் தேதி 40 ஆயிரம் ரூபாயை தாண்டியது. ஒரு கிராம் தங்கம் 5,006 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 40,048 ரூபாய்க்கும் விற்பனையானது. ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதுமே கடந்த மார்ச் மாத தொடக்கத்திலும் இதேபோல் தங்கம் விலை 40 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது, ஆனால் அடுத்த நாள் முதலே மீண்டும் தங்கம் விலை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. அதேபோல் இந்த முறையும் தங்கம் விலை குறையும் என இல்லத்தரசிகள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் மாறாக மீண்டும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்திருக்கிறது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 40,112 க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து ரூ.5,014-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,200 க்கு விற்கப்படுகிறது.