சென்னையில் லாரி மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து.. 6 பேர் பலி..

 
 லாரி மீது அரசு பேருந்து மோதி  விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில்,  இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே சென்னை -   திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை  50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று  சென்னையிலிருந்து -  சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.  அப்போது முன்னாள் இரும்பு கம்பி ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த  லாரியை முந்தி செல்ல அரசு பேருந்து முயன்றதாக தெரிகிறது.

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

இதில்  லாரியின் இடது பக்கமாக பேருந்து அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.  இதில் பேருந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட  ஐந்து பேர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.  மேலும்  10 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு   செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

அப்போது சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.  இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் இறந்தவர்களின் உடல்களை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து இறந்தவர்களின் அடையாளம் காணும் பணிகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.  இந்த விபத்து காரணமாக சென்னை -  திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.