டாக்டர் அப்துல்கலாம் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - தமிழக அரசு அறிவிப்பு..

 
தலைமைச் செயலகம்


டாக்டர் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவைர்  மறைந்த டாக்டர் அப்துல் கலாம் நினைவாக, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது.  விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல்  மற்றும் மாணவர்கள் நலன் ஆகிய துறைகளில்  சிறந்து விளங்குபவர்களுக்கு இந்து விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது... இந்த விருது பெற தகுதியுடையவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே.  

டாக்டர் அப்துல்கலாம் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - தமிழக அரசு அறிவிப்பு..

சுதந்திர தினத்தன்று தமிழக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலினால் இந்த விருது வழங்கப்படும். இந்நிலையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் தங்களின் சுயவிவரக் குறிப்புடன் https://awards.tn.gov.in இணையதளத்தில் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர் நலன் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் வழங்கி வருகிறார். இந்த ஆண்டுக்கான விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், 8 கிராம் தங்கத்திலான பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான நபரை, தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும்”  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.