பா.ஜ.கவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி - வைகோ குற்றச்சாட்டு..

 
 பா.ஜ.கவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி - வைகோ குற்றச்சாட்டு.. 

அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவும் பாஜகவின் ஊதுகுழலாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழா,  சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் கொண்டாடப்பட்டது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற மாவீரராக பிரபாகரன் திகழ்வதாகவும் தன் நெஞ்சில் வைத்து பூஜிக்கின்ற தலைவராக இருப்பதாகவும் வைகோ கூறினார்.

முதன்முறையாக ஆளுநர் ஆர்.என் ரவி

ஈழப்போர் நடந்தபோது இருந்த இந்தியா போன்று தற்போதும்  மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருவதாகவும் ஒரே லட்சியம் தமிழீழம் அமைவது மட்டும்தான் எனவும் வைகோ தெரிவித்தார். தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவதாகவும்,  பாஜகவின் ஊது குழலாக செயல்படுவதாகவும் வைகோ குற்றம் சாட்டிய வைகோ, ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான 6 பேருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது பச்சை துரோகம் எனவும் குறிப்பிட்டார்.