மனைவி தோல்வி ; கிண்டல் செய்த திமுக தொண்டர் படுகொலை!!

 
tn

கூடலூர் அருகே திமுக தொண்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த சூழலில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சியில் 10 வது வார்டில் அதிமுக சார்பில் நவுசாத் மனைவி ஷிம்ஜித்தும்,  திமுக சார்பாக பெண் வேட்பாளர் எமிபோல் ஆகியோரும் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் எமிபோல் வெற்றி பெற்றுள்ளார். 

murder

இந்த சூழலில் அதே பகுதியை சேர்ந்த திமுக தொண்டர் சமீர் என்பவர் நவுசாத் மனைவி ஷிம்ஜித் தோல்வி குறித்து கிண்டல் செய்ததாக தெரிகிறது.  இதை தனது கணவர் நவுசாத்திடம் ஷிம்ஜித் கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த நவுசாத் சமீர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை கத்தியால் குத்தியுள்ளார் . இதை தடுக்க வந்த அஸ்கர் என்பவரையும் நவுசாத் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சமீர் பரிதாபமாக உயிரிழந்தார்.

murder

 இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவர்சோலை போலீசார் சமீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அத்துடன் படுகாயமடைந்த அஸ்கரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளியை நவுசாத் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் .அவரை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி வாசிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.