செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்னரும் கூட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். விடுமுறை அளிக்கப்படும் என மாணவர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் மழையில் குடை பிடித்தவாறு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் காலையில் இருந்து மழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துளார். இதனால் மாணவர்கள் பள்ளி, மற்றும் கல்லூரிகளில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.