அரையாண்டு தேர்வு விடுமுறை எப்போது? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 
school

வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

dpi

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 15ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கியது.  அரையாண்டு தேர்வு 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. 6, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7,9, 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

school

இந்நிலையில் அரையாண்டு தேர்வுகள் முடிந்த பின்னர் வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.