சென்னை திரும்பும் மக்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்!!

 
ttn

தீபாவளி பண்டிகை முடிந்து சாரை சாரையாக மக்கள் சென்னை திரும்பும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டுள்ளது.

bus

தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.  சொந்த ஊர்களுக்கு சென்று மக்கள் திரும்பும் நிலையில் நேற்று பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவு தென் மாவட்டங்களில் இருந்து மீண்டும் மக்கள் சென்னைக்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். சென்னையில் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீண்டும் சொந்த ஊரிலிருந்து திரும்பும்  நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

bus strike

நூற்றுக்கணக்கான பேருந்துகள்,  நான்கு சக்கர வாகனங்கள் என சென்னையை நோக்கி மக்கள் ஒரே நேரத்தில் சாரை சாரையாக வந்து கொண்டிருப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை திரும்பி வரும் மக்களால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.