பள்ளி மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!!
May 30, 2022, 11:23 IST1653890011159
பள்ளி மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் பொன்மலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் முன்பாக வாலிபர் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக நின்று ஆபாச சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சி பொன்மலையில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளின் முன்பு ஆடையின்றி நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமாரை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.