சென்னையில் கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை: மகள் தவிப்பு

 
c

கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை ராயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 ராயபுரம் பிச்சாண்டி லேன் பகுதியில் வசித்து வந்தவர்கள் மகசர் அலி -பர்கத் நிஷா.   இந்த தம்பதியினர் வீட்டிற்குள் தூக்குமாட்டி சடலமாக தொங்கிக் கொண்டிருந்தை பார்த்து மகள் கதற, உறவினர்கள் 

மகசர் அலி -பர்கத் நிஷா தம்பதியினரின் மகள் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.   மாலையில் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிய மகள் வீடு உட்புறமாக பூட்டி இருந்ததால் தனது மாமாவிற்கு போன் செய்திருக்கிறார்.

tho

 இதையடுத்து அவரது மாமா முகமது ரோஷன் விரைந்து வந்து பார்த்த போது வீடு பூட்டி இருந்திருக்கிறது.   அக்கம்பக்கத்தினரிடம் விவரத்தை சொல்லி அவர்களை துணைக்கு அழைத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது  மகசர் அலி -பர்கத் நிஷா . இருவரும் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைப்பார்த்து கதறி அழுத மகளின் நிலை அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 உடனடியாக ராயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க,  போலீசார் விரைந்து வந்து இருவரையும் உடலையும் கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

 போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது . உறவினர்கள் அக்கம்பக்கத்தினரிடம் ராயபுரம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.