‘கணவன் வீட்டில் கழிவறை இல்லை' - தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி!!

 
tn

கடலூர் மாவட்டம் அரிசிபெரியாங்குப்பம் சேர்ந்த சேர்ந்தவர் ரம்யா. மருத்துவத்துறையில் எம்எஸ்சி பட்டதாரியான இவர் மருந்தக பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் புது நகரை சேர்ந்த கார்த்திகை என்பவரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 6ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். 

rb

இந்த சூழலில் கார்த்திகேயன் வீட்டில் கழிவறை இல்லாததால் கார்த்திகேயனுக்கும், ரம்யாவுக்கும் சண்டை நடந்துள்ளது.  கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்று ரம்யா தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளார். இதனால்  ஏற்பட்டமனக்கசப்பின்  காரணமாக ரம்யா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இன்னும் சில நாட்களில் கழிவறை கட்டித்தருவதாக கார்த்திகேயன் கூறிய நிலையில், அதை செய்யாமலே இருந்துள்ளார்.

இது தொடர்பாக மீண்டும் தொலைபேசியின் மூலம் ரம்யா கார்த்திகேயன் உடன் விவாதம் செய்துள்ளார். இந்த விவாதத்தின் போது கார்த்திகேயன் ரம்யாவை  திட்டியதாக தெரிகிறது.  இதனால் மனமுடைந்த அவர் தாய் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் தாய்,  உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

tn


இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் ரம்யாவின் தாய் மஞ்சுளா புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே  ஆகும் காரணத்தினால் இந்த விசாரணை ஆர்டிஓ பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.